ராமநாதபுரம் நகர் பகுதிகளில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளில் பயணிக்கும் வாகனஓட்டிகள் சிலர் சாலை விதிகளை முறையாக கடைபிடிப்பதில்லை. பிற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை இயக்குகின்றனர். இதனால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்து போலீசார் சாலை விதிகளை மீறும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்களா?