கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தாராபுரம் ரோட்டில் பஸ் நிலையம் உள்ளது. பெயருக்குத்தான் பஸ்நிலயமே தவிர இங்கு எந்தவித உட்கட்டமைப்பு வசதியும் கிடையாது. இங்கு அனைத்து பஸ்களும் வந்து செல்வது கிடையாது. காரணம் பஸ்கள் நின்று செல்ல கட்டிட வசதி இல்லாமல் உள்ளது. பஸ் நிலையத்திற்குள் மேடு பள்ளமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கின்றது. எனவே அரவக்குறிச்சியில் கட்டிட உட் கட்டமைப்பு வசதிகளுடன் தற்போது இருக்கும் இடத்திலோ அல்லது வேறு இடம் தேர்வு செய்தோ அரவக்குறிச்சியில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.