சென்னை அண்ணாநகர் கிழக்கு, ஓ பிளாக் 30-வது தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மின்கம்பம் ஆபத்தான முறையில் சாலையை நோக்கி சரிந்து கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் அந்த பகுதி மக்கள் அச்சத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர். எனவே, மின்வரிய துறை அதிகாரிகள் உடனே புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.