கரூர் மாவட்டம் திருக்காடுதுறை ஊராட்சி பரமத்தி வேலூர்-கொடுமுடி செல்லும் சாலையில் உள்ள ஆலமரத்து மேடு பகுதி வழியாக அரசு மற்றும் தனியார் சென்று வருகின்றன. ஆனால் இந்த சாலையில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் மழை, வெயில் காலங்களிலும் அந்த பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே உள்ளாட்சித் துறை அதிகாரிகள் ஆலமரத்து மேடு பகுதியில் பயணிகள் நிழற்குடை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.