சிங்கம்புணரியில் இருந்து எஸ்.புதூர் ஒன்றியம் புழுதிபட்டி வழியாக திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி வரை அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீபகாலமாக வழக்கமான நேரத்தை விட முன்கூட்டியே இயக்கப்படுவதால் இவ்வழியில் உள்ள கிராம மக்கள், மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மீண்டும் பழைய நேரத்திலேயே அந்த பஸ்சை இயக்க வேண்டும்.