சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசலால் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் நடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போக்குவரத்தை நெரிசலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.