சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதி மற்றும் தெருக்களில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. மேலும் இவை சாலையில் படுத்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே வாகனஓட்டிகளின் நலன் கருதி சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.