தஞ்சாவூர்-புதுக்கோட்டை சாலை திருக்கானூர்பட்டி நான்கு ரோடு சந்திக்கும் இடத்தில் ரவுண்டானா இல்லை. அந்த சாலை வழியாக வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இதன்காரணமாக அந்த பகுதி வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். போக்குவரத்து சிக்னல் இல்லாததால் பொதுமக்களும் சாலையை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து சாலையில் ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?