கிடப்பில் போடப்பட்ட பயணிகள் நிழற்குடை பணி

Update: 2024-09-15 16:19 GMT

கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி வடிவேல் நகரில் கரூர், கொடுமுடி, ஈரோடு செல்லும் பயணிகளுக்காக பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பஸ் பயணிகள் மழை மற்றும் வெயில் காலங்களில் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணியை விரைந்து முடித்து நிழற்குடையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி