பாராக மாறிய பயணிகள் நிழற்குடை

Update: 2024-09-01 17:59 GMT
சிதம்பரம் வண்டிகேட்- கடலூர் செல்லும் புறவழிச்சாலையில் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள பயணிகள் நிழற்குடை சரியான பராமாிப்பு இல்லாததால் அதை அப்பகுதியை சேர்ந்த சிலர் இரவு நேர மதுபாராக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பயணிகள் நிழற்குடை சேதமடைந்து வருவதால் அதை பயன்படுத்த பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்