போக்குவரத்து நெரிசல்

Update: 2024-09-01 14:20 GMT
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையத்திற்கும், பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கும் தினமும் ஏராளமான சேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சேர் ஆட்டோக்கள் பஸ் நிறுத்தங்கள் நிற்காமல் கண்ட இடங்களிலும் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி விடுகின்றனர். இதனால் சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் பின்னால் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலையும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசார் சேர் ஆட்டோக்கள் குறிப்பிட்ட இடங்களில் நிறுத்துவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்