கிடப்பில் போடப்பட்ட பாலப்பணி

Update: 2024-09-01 11:26 GMT

திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை ஊராட்சி காமநாயக்கன்பாளையம் பகுதியில் அய்யன் வாய்க்கால் குறுக்கே குறுகிய பாலம் இருந்து வந்தது. அந்த பாலத்தை இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு புதிய பாலம் கட்டுவதற்காக பழைய பாலம் இடிக்கப்பட்டது. பின்னர் அந்த இடத்தில் புதிய பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்ட நிலையில் தற்போது அந்த பணி முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்