விபத்து அபாயம்

Update: 2024-09-01 09:18 GMT

கோவை தடாகம் சாலையின் நடுவில் கோவில்மேடு பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விபத்துகளை தடுக்க தடுப்பு கற்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இதில் 2 கற்களை மட்டும் சாலையோரம் அகற்றி வைத்துவிட்டு, சாலையை கடக்க சிலர் வழி ஏற்படுத்தி வைத்து உள்ளனர். இதன் காரணமாக அந்த வழியாக சாலையை கடப்பவர்கள் வாகனத்தில் சிக்கி விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. எனவே அங்கு மீண்டும் தடுப்பு கற்களை வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

சுதர்ஷன், கோவில்மேடு.

மேலும் செய்திகள்