தேவையற்ற வேகத்தடைகள் அகற்றப்படுமா?

Update: 2024-07-14 12:19 GMT

 பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா, தெரணி கிராமத்தில் இருந்து காரை செல்லும் சாலையில் அதிக அளவில் வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த சாலையில் அவசரத் தேவை காரணமாக 108 ஆம்புலன்ஸ்கள் செல்லும்போது காலதாமதம் ஏற்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் வேகத்தடை இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தேவையற்ற இடங்களில் உள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்