கூடுதல் பஸ் இயக்க வேண்டும்

Update: 2024-07-14 10:58 GMT

பெரம்பலூர் நகரில் இருந்து அம்மாபாளையம் மற்றும் லாடபுரம் வழியாக மேலப்புலியூர் கிராமத்திற்கு அரசு பஸ் ஒன்று இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுவதினால் இப்பகுதி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு இந்த பஸ் போதுமானதாக இல்லாததால் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் சிலர் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்