பஸ் வசதி வேண்டும்

Update: 2024-06-30 11:37 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், தெரணி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் காலை நேரத்தில் பெரம்பலூருக்கு செல்லும் வகையில் போதிய பஸ் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தெரணி கிராமத்தில் இருந்து பெரம்பலூருக்கு தினமும் காலை 7 மற்றும் 8 மணிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்