போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2024-06-30 11:36 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை பஸ் நிலையம் திருச்சி சாலை சந்திப்பில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனை தற்போது சரிசெய்த நிலையில், அதன் அருகே இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்