சிக்னல் அமைக்கப்படுமா?

Update: 2024-06-16 12:14 GMT

கோவை-திருச்சி சாலையில் ஒண்டிப்புதூர் அருகே காமாட்சி புரம் பஸ் நிறுத்தம் உள்ளது. இதன் அருகில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த சாலையை அடிக்கடி பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கடந்து செல்கிறார்கள். ஆனால் சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் ரோட்டை கடக்க மாணவர்கள் அச்சப்படுகிறார்கள். குறிப்பாக பாதசாரிகளும் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காமாட்சிபுரம் பஸ் நிறுத்தம் அருகே சிக்னல் அமைத்து தர ஆவனம் செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்