நிழற்கூடம் வேண்டும்

Update: 2024-06-09 18:05 GMT

சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் வழியில் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது. இந்த பகுதியில் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்கிறது. ஆனால் திருவள்ளுவர் பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ் நிறுத்தம் என்ற அறிவிப்பு பலகை இல்லை. மேலும் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு நிழற்கூட வசதி இல்லை. எனவே இந்த பஸ் நிறுத்தத்தில் அறிவிப்பு பலகை வைத்து நிழற்கூடம் அமைத்து தர வேண்டும்.

-சசிகுமார், தாரமங்கலம்.

மேலும் செய்திகள்