வேகத்தடையால் விபத்து

Update: 2024-06-09 11:43 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஊரக சாலைகளில் விபத்தை தடுக்க அமைக்கப்பட்ட வேகத்தடைகளின் மீது உரிய வர்ணம் பூசப்படாமல் இருப்பதால் விபத்தை தடுக்க ஏற்படுத்த அமைக்கப்பட்ட வேகத்தடைகளே தற்போது விபத்து ஏற்பட காரணமாக, அமைந்துள்ளது. இதனால் வேகத்தடைகளின் மீது வர்ணம் பூச வேண்டும் எனவும், வர்ணம் பூசப்படாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் பலரும் விபத்தில் சிக்கி காயங்கள் ஏற்பட்டு வருவதாகவும் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்