பஸ்களில் பாதிவழியில் இறக்கிவிடப்படும் பயணிகள்

Update: 2024-05-26 16:37 GMT
கடலூர் மாவட்டத்தில் தினமும் அதிக அளவில் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் என்பதால் பெரும்பாலான கண்டக்டர்கள் சில்லரை கொண்டு வருவது கிடையாது. இதனால் பஸ்சில் ஏறும் ஆண் பயணிகளிடம் சில நேரங்களில் டிக்கெட்டுக்கு உரிய சில்லரை இல்லை என்று கூறி அவர்களை பாதிவழியில் பஸ்சில் இருந்து இறக்கி விட்டு விட்டு கண்டக்டர்கள் செல்கின்றனர். இதனால் ஆண் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்