பஸ் நிறுத்தம் வேண்டும்

Update: 2024-05-26 11:37 GMT
பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் கோனோரிப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட முத்துநகர் உள்ளது. இந்த நகரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்தப்பகுதி பொதுமக்கள் பெரம்பலூருக்கு செல்ல வேண்டும் என்றால் பஸ் ஏற சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோனேரிபாளையம் பஸ் நிறுத்தத்திற்கு செல்ல வேண்டியிருக்கிறது. இதனால் வேலைக்கு செல்வோர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் முத்துநகரில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வசதியாக பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும், என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்