போக்குவரத்து நெரிசல்

Update: 2024-05-26 10:54 GMT

கோவையை அடுத்த கோவைப்புதூரில் உள்ள மரப்பாலம் பகுதியில் தினமும் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். சில நேரங்களில் சிறு சிறு விபத்துகளும் ஏற்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளிடையே தகராறு ஏற்படுகிறது. எனவே அந்த சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்