முதியோர்கள் அவதி

Update: 2024-05-26 08:49 GMT

மணவாளக்குறிச்சி சந்தை சந்திப்பில் எப்போதுமே மக்கள் நடமாட்டத்துடன் நெரிசல் அதிகமாக இருக்கிறது. இந்த பகுதியில் வாகன ஓட்டிகள் குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை. தலை கவசம் அணியாமல் வேகமாக ஓட்டுகின்றனர். இதனால், சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள், முதியோர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, முதியோர் நலன்கருதி மணவாளக்குறிச்சி சந்திப்பில் போக்குவரத்து ஒழுங்கு படுத்த ஒரு காவலரை பணிக்க அமர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேஷ் கோபால், மணவாளக்குறிச்சி.

மேலும் செய்திகள்