சாலையில் சிதறும் ஜல்லிகற்கள்

Update: 2024-05-19 15:42 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து உத்தனப்பள்ளி செல்லும் சாலையில் ஏராளமான டிப்பர் லாரிகள் செல்கின்றன. இந்த லாரிகள் கல்குவாரிகளில் இருந்து ஜல்லிகற்களை ஏற்றி செல்லும்போது ஜல்லிகற்கள் சாலையில் சிதறுகின்றன. இதனால் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். மேலும் வாகன ஓட்டிகள் சாலையில் சறுக்கி விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த கற்கள் சாலையில் சிதறாமல் இருக்க லாரியின் மேல்பகுதியை தார்பாயால் மூடி கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்