பஸ் நிறுத்தத்தில் இருக்கைகள் தேவை

Update: 2024-05-12 18:18 GMT
பெண்ணாடம் அருகே முருகன்குடி பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையில் இருக்கைகள் இல்லை. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் முதியோர்கள் கால்கடுக்க நின்றும், படிக்கட்டில் அமர்ந்தும் பஸ் ஏறிச்செல்லும் அவல நிலை உள்ளது. அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் சமூக விரோதிகள் சிலர் பயணிகள் நிழற்குடையை மதுகுடிக்கும் பாராக பயன்படுத்தி வருகின்றனர். எனவே பஸ் நிறுத்தத்தில் இருக்கை வசதிகளை ஏற்படுத்தி தருவதோடு. அங்கு சமூக விரோதிகள் மது அருந்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்