அடிக்கடி விபத்துகள்

Update: 2024-05-12 15:54 GMT

ராசிபுரம் ஆண்டகலூர் கேட்-திருச்செங்கோடு செல்லும் வழியில் அடுத்தடுத்து தோனமேடு, பாலப்பாளையம் பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இந்த இடங்களில் சாலை அகலமாக போடப்பட்டுள்ளதால், இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதனால் இப்பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இந்த 2 இடங்களிலும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டால் சாலை விபத்துகள் ஏற்படாமல் இருக்கும். மேலும் சாலையை கடக்கும் பொதுமக்களுக்கும் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடை அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்