பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2024-05-12 12:12 GMT

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் தொடங்கி, புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் திருச்சி எல்லையான மாத்தூர் ரவுண்டான வரையில் சாலைகள் இருபுறங்களிலும் அகலப்படுத்தப்பட்டு, மையத்தில் தடுப்பு சுவரும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த நெடுஞ்சாலைகளில் பயணிகள் நிழற்குடைகள் இன்னும் அமைக்கப்படாமலேயே உள்ளது. தற்போதைய அக்னிநட்சத்திர வெளியில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பெரிதம் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அகலப்படுத்தப்பட்ட சாலைகளில் உள்ள மையத் தடுப்பு சுவர் பகுதிகளில் புதுதெரு வரை உயர்மட்ட மின் விளக்குகள் உள்ளது. இரவில் புதுத்தெரு தொடங்கி மாத்தூர் ரவுண்டான வரை விளக்குகள் இல்லாததால் பொதுமக்கள் இருளில் பயணம் செய்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்