முன்பதிவு மையம் திறக்கப்படுமா?

Update: 2024-05-05 18:12 GMT
கடலூர் பஸ் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையம் செயல்பட்டு வந்தது. இதனை பயன்படுத்தி பொதுமக்கள் தாங்கள் விரும்பும் ஊர்களுக்கு பஸ்சில் செல்ல முன்பதிவு செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஓராண்டாக இந்த முன்பதிவு மையம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் பஸ்சில் செல்ல முன்பதிவு செய்ய பெரும் சிரமமடைந்து வருகின்றனர். மேலும் பஸ்கள் வந்து செல்லும் நேரம் குறித்த தகவல்களையும் பெற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே முன்பதிவு மையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்