விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Update: 2024-05-05 12:47 GMT

கோடை சீசன் தொடங்கியுள்ளதால் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அதிவேகத்தில் செல்வதால் விபத்தில் சிக்கி வருகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே டானிங்டன் சந்திப்பு பகுதியில் வாகன ஓட்டிகளை நிறுத்தி போதிய விழிப்புணர்வு அளிக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்