பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும்

Update: 2024-05-05 11:19 GMT

அரவக்குறிச்சி அருகே ராஜபுரம் ரோட்டில் பாரதியார் நகர் பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடைஇல்லை. இதனால் வெயிலில் பொதுமக்கள் நெடு நேரம் காத்து கிடக்கும் நிலை உள்ளது. இதனால் கர்ப்பிணிகள், முதியவர்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என அப்பதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இருந்து வேலைக்கு செல்லும் பொதுமக்களும், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகளும் வெயிலில் காத்துக் கிடக்கின்றனர். குறிப்பாக பஸ்சுக்காக காத்திருக்கும் முதியோர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே அரவக்குறிச்சி அருகே பாரதியார் நகர் அருகில் பயணியர் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்