வாகனங்களை வழிமறிக்கும் பதாகை

Update: 2024-04-21 12:17 GMT

வாகனங்களை வழிமறிக்கும் பதாகை

திருப்பூர் வாலிபாளையம் ராஜாராவ் வீதி அருகே 3பக்கமும் இருந்து இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் செல்வார்கள். அதிக போக்குவரத்து உள்ள இந்த பகுதியில் முக்கிய பகுதியில் பாதையை மறித்து விளம்பர பதாகையை கட்டி வைத்துள்ளனர்.

இருசக்கர வாகன ஓட்டிகளின் முகத்தை பதம் பார்க்கும் வைக்கப்பட்டுள்ள இந்த விளம்பர பதாகையால் எதிரே வருபவர்கள் யார்? என்பது தெரியாத அளவிற்கு உள்ளது. எனவே சம்பந்த மாநகராட்சி அதிகாரிகள் இந்த விளம்பர பதாகையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

வெற்றிவேல்,வாலிபாளையம்.

89767 36373

மேலும் செய்திகள்