விவசாயிகள் அவதி

Update: 2024-04-14 15:04 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் இருந்து மணியார் குட்டை செல்லும் சாலையானது போடப்பட்டு, பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையை அதிக அளவில் பயன்படுத்தும் விவசாயிகள் தங்களின் விளைநிலங்களுக்கு விவசாய பொருட்களை எடுத்துச் செல்லவும், விளைவித்த பயிர்களை கொண்டு வரவும் இந்த சாலையை பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்