வர்ணம் பூசப்படாத வேகத்தடைகள்

Update: 2024-04-14 15:01 GMT

பெரம்பலூர் மாவட்டம், கிருஷ்ணாபுரத்தில் இருந்து அரும்பாவூர் செல்லும் சாலை 10 கிலோ மீட்டர் சாலையில் சுமார் 19 வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வேகத்தடைகளில் வெள்ளை வர்ண கோடுகள் பூசப்படாமல் உள்ளதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை வேகமாக விட்டு, நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்