அதிக கட்டணம் வசூல்

Update: 2024-04-07 10:48 GMT

கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் அரசு, தனியார் பஸ்கள் மேம்பால வேலை நடைபெறுகிறது என்றுக்கூறி சுண்டக்காமுத்தூர் வழியாக சுற்றி சென்றன. அப்போது தனியார் பஸ்களில் கட்டணம் ரூ.25-ல் இருந்து ரூ.28 வரை உயர்த்தப்பட்டது. தற்போது அந்த வழியாக செல்லாமல் வழக்கமான வழியில்தான் பஸ்கள் சென்று வருகின்றன. ஆனால் கட்டணம் மட்டும் குறைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களுக்கு செலவு அதிகரிக்கிறது. எனவே அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்