புதிய பஸ் இயக்கப்படுமா?

Update: 2024-03-31 18:03 GMT

கடையம் அருகே கருத்தப்பிள்ளையூர் கிராமத்திற்கு பாபநாசம் பணிமனையில் இருந்து இயக்கப்படும் தடம் எண்.20 டவுன் பஸ் மிகவும் பழுதடைந்த நிலையில் இருக்கிறது. இதனால் அடிக்கடி இந்த பஸ் நிறுத்தப்படுகிறது. இதில் காலை, மாலையில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே புதிய டவுன் பஸ்சை இயக்குவதுடன், குறிப்பிட்ட நேரத்திற்கு கிராமத்திற்கு வந்துசெல்லவும் போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்