கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2024-03-31 15:32 GMT

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, குன்றான்டாரார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரம்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. நாள்தோறும் வீரம்மாகாளியம்மனை தரிசிக்க பக்தர்கள் வரும் நிலையில் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை நாளன்றும் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இருப்பினும் கந்தர்வக்கோட்டையில் இருந்து பெரம்பூருக்கு குறைந்த அளவிலான பஸ்களே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பக்தர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக இப்பகுதியில் கூடுதல் பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்