நிழற்குடை இன்றி பயணிகள் அவதி

Update: 2024-03-31 12:03 GMT

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியம், தடாகோவில் அருகே உள்ள நவமணி நகரில் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் இதுவரை பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் இந்த பஸ் நிறுத்ததில் இருந்து வெளியூர் செல்லும் பொதுமக்கள், வெயில், மழையில் நின்று பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்