திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், தென்புறநாடு ஊராட்சியைச் சேர்ந்த கானப்பாடி கிராமத்தில் மலைவாழ் மக்கள் சுமார் 400 பேர் குடியிருந்து வருகின்றனர். நரசிங்கபுரத்திலிருந்து கானப்பாடியை இணைக்கும் சாலையில் அமைந்துள்ள தரைப்பாலத்தை, மழை காலங்களில் வெள்ளப்பெருக்கெடுத்து தண்ணீர் மூழ்கடித்துச் செல்வதால், கானப்பாடி துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடைபடுவதால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், முதியோர், கர்ப்பிணிகள் என பெரும்பாளான மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பச்சைமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள கிராம மக்களின் அத்தியாவசிய தேவையான இத்தரைப்பாலத்தை மேம்பாலமாக கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.