பஸ்சை இயக்க வேண்டும்

Update: 2024-03-31 07:21 GMT

சேனம்விளையில் இருந்து நாகர்கோவிலுக்கு தடம் எண் 6 ‘ஏ’ என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. தற்போது கடந்த 3 மாதங்களாக இந்த பஸ் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதியில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் சீராக இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்