பஸ் சேவை நீட்டிக்கப்படுமா?

Update: 2024-03-24 13:10 GMT

சூலூர் அரசு போக்குவரத்து கிளை சார்பில் காந்திபுரத்தில் இருந்து சூலூர் வழியாக குமாரபாளையம் வரை செல்லும் 41-டி என்ற நகர்ப்புற பஸ்சும், காந்திபுரத்தில் இருந்து சூலூர் வழியாக கோம்பகாட்டுபுதூர் வரை செல்லும் 19-ஜே என்ற நகர்ப்புற பஸ்சும் சோமனூர் பஸ் நிலையம் வரை இயக்கப்பட வேண்டும். இதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் அந்த வழிதடத்தில் 2 பஸ்கள் மட்டுமே சோமனூர் வரை சென்று வருகின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே மேற்கண்ட பஸ்களின் சேவையை நீட்டிக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்