நடைபாதை ஆக்கிரமிப்பு

Update: 2024-03-24 13:06 GMT

குன்னூர் நகரில் உள்ள நடைபாதையில் ஆக்கிரமிப்பு செய்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக அனுமதியின்றி கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் சாலையில் இறங்கி நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. எனவே நகரில் மவுண்ட் ரோடு, வி.பி.தெரு, வண்டிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நடைபாதை கடைகளை அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்