நிழற்குடை தேவை

Update: 2024-03-24 10:12 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரியை அடுத்த கீழக்கொட்டையூர் பிள்ளையார் கோவில் அருகே வடக்குத்தெரு பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை வசதி இல்லை. இதனால் அப்பகுதியில் இருந்து சிகிச்சைக்காக செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் சாலையோரத்தில் வெயிலிலும், மழையிலும் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். இதன்காரணமாக அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். தற்போது தஞ்சை மாவட்டத்தில் நாளுக்குநாள் வெயிலின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் நிழற்குடை அமைத்திட நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி