வேகத்தடை வேண்டும்

Update: 2024-03-17 16:33 GMT

மதுரை நகர் மீனாம்பாள்புரம் - குலமங்கலம் மெயின் ரோடு இணைப்பு சாலை எல்.ஐ .சி 2-வது தெரு காலனியில் ஓரு தனியார் பள்ளி உள்ளது. இந்த சாலையில் வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் வேகமாக வருகின்றன. இதனால் அப்பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் , அப்பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர் ,குழந்தைகள் மிகவும் அச்சமடைகின்றனர். எனவே அப்பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேகத்தடை அமைத்து தர வேண்டும்.


மேலும் செய்திகள்