பயணிகள் நிழற்குடை தேவை

Update: 2024-03-17 14:51 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் செல்லும் சாலையில் முதல்சேரி ஊராட்சி உள்ளது. இங்கு பயணிகள் நிழற்குடை இல்லை. இதன்காரணமாக பயணிகள் சாலையோரத்தில் வெயிலிலும், மழையிலும் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்