விபத்து அபாயம்

Update: 2024-03-10 14:08 GMT

கீரனூர்- திருச்சி- புதுக்கோட்டை சாலையில் 2 தனியார் வங்கிகள், திருமண மண்டபம் உள்ளதால் வானங்கள் மெதுவாக செல்ல அந்த இடத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் இருபுறமும் இருக்கும் இடத்தில் வாகனங்கள் போட்டி போட்டுக்கொண்டு வேகத்தடையில் ஏறாமல் சென்று விடுகிறது. இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. தற்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சாலையின் இருபுறமும் கற்களை அடுக்கி வைத்துள்ளதால் இரவு நேரத்தில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்