பயணிகள் நிழலகம் அமைக்கப்படுமா?

Update: 2024-03-10 11:58 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பெரிய கோவில் தேரடி பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. ஆனால் பயணிகள் நிழலகம் அமைக்கப்படாமல் இருக்கிறது. இதன் காரணமாக பஸ்சுக்காக பொதுமக்கள் சாலையோரத்தில் வெயிலிலும், மழையிலும் காத்திருக்கின்றனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மேற்கண்ட பகுதியில் பயணிகள் நிழலகம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்