சிதிலமடைந்த பாலம்

Update: 2024-03-03 11:45 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள சீரானத்தம்- ஆதனூர் சாலையின் குறுக்கே செல்லும் ஓடையில் மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது கைப்பிடிகள் சிதிலமடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே இந்த பாலத்தில் விபத்து ஏற்பட்டால் வாகனங்கள் ஓடையில் விழும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்