நகர பஸ்கள் இயக்க கோரிக்கை

Update: 2024-03-03 11:44 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உள்ள தொண்டைமான்ஊரணி ராஜாபகதூர், அண்ணாநகர் மீனம்பட்டி, மோளுடையான்பட்டி, வலங்கொண்டான்விடுதி, கணபதிபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கந்தர்வக்கோட்டையில் இருக்கும் அரசுப்பள்ளி, கந்தர்வக்கோட்டை அருகே புதுப்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே டி.பி. சானிடோரியத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி, தஞ்சாவூரில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு கந்தர்வக்கோட்டை வழியாக நூற்றுக்கணக்கான மாணவர்கள் நாள்தோறும் சென்று வருகின்றனர். ஆலங்குடியிலிருந்து தொண்டைமான்ஊரணி வழியாக காலை 6.50 மணியளவில் நகர பஸ் கந்தர்வக்கோட்டைக்கு செல்கின்றது. அந்த பஸ்சில் செல்லும் மாணவர்கள் பள்ளி கல்லூரி திறப்பதற்கு இரண்டரை மணி நேரத்திற்கு முன்னதாகவே பள்ளி கல்லூரிகளுக்கு சென்று காத்திருக்கவேண்டிய நிலை உள்ளது. தொண்டைமான்ஊரணி சுற்றுவட்டார கிராமப்பகுதி மாணவர்களின் நலன் கருதி காலை 8.30 மணியளவில் கந்தர்வக்கோட்டையிலிருந்து தொண்டைமான்ஊரணி வழியாக மீனம்பட்டி வரை கூடுதலாக நகர பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்