கூடுதல் பஸ் வசதி தேவை

Update: 2024-02-25 18:19 GMT
விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஏராளமான மக்கள் தினந்தோறும் சென்று வருகின்றனர். மேலும் பலர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பெறுகின்றனர். இருப்பினும் இந்த மருத்துவமனைக்கு சென்று வர போதுமான பஸ் வசதி இல்லை. இதனால் நோயாளிகள், பொதுமக்கள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே நோயாளிகள் நலன் கருதி மருத்துவமனைக்கு சென்று வர கூடுதல் பஸ்வசதி ஏற்படுத்தி தரஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்